புதன், 18 ஜனவரி, 2012

தில்லையாடி சிவராமன்

பூமியை வெட்டித் தங்கத்தைப் புதைத்தோம்!
யானைக்கு ஒரு குணம் உண்டு. தன்னுடைய காதில் எறும்பைவிட நினைத்ததவனையும் நினைவில் வைத்திருக்கும். தன் நேசத்துக்குரிய கரும்பைக்கொடுத்தவனையும் நினைவில் வைத்திருக்கும். இந்த யானை குணம், இதிகாசத் தலைவன் எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும்.
அதனால்தான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் மறைந்தபோது, “யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்!” என்றும்;
இதுவரை பூமியை வெட்டித்தான் தங்கத்தை எடுத்தோம். ஆனால் இன்று பூமியை வெட்டி தங்கத்தை அல்லவா புதைக்கிறோம்!” என்றெல்லாம் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரைப் பற்றியே இதய வெளிப்பாட்டை எழுதிக் காட்டினார்கள் அறிஞர் பெருமக்கள்.
பொன்மனச் செம்மலின் யானை பலத்திற்கும், குணத்திற்கும் எடுத்துக்காட்டாய் நிகழ்ந்த நிகழ்வு இது.
அறுபதுகள் வரைமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வெள்ளித் திரையில் மட்டுமல்லாமல் நாடக மேடைகளிலும் மின்னிக் கொண்டிருந்தார்.
அன்று தஞ்சை அரண்மனைத் தோட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்இன்பக்கனவுநாடகம் நடந்துக் கொண்டிருக்கிறது அந்ந நாடக்க் குழுவிற்கு மட்டுமல்லாமல், மக்கள் திலகத்தின் அனைத்துக்ச் செயல்களுக்கும் ஆதாரமாக விளங்கியவர் ஆர்.எம். வீரப்பன் அவர்கள்.
திருவாரூரில் மக்கள் திலகத்தின் நாடகத்தை நடத்த, ஆர்.எம். வீரப்பனிடம், தேதி கேட்டு வருகிறார் தில்லையாடி சிவராமன் என்பவர். ஆர்.எம். வீ. அவர்கள் புரட்சித் தலைவரிடம் விஷயத்தைக் கூற, புரடிச்த்தலைவரும் சந்தோசமாக தேதி தருகிறார். நாடகத்திற்கென்று சல்லிகாசு வேண்டாம். போக்குவரத்து செலவு மட்டும் போதும் என்ற நிபந்தனையுடன் இதைக்கேட்டதும்,
ஆம்.எம்.வீக்கு மட்டுமல்ல தில்லையாடி சிவராமனுக்கும் அதிர்ச்சி. காரணம், வெளியூர் நாடகங்களுக்கு எம்.ஜி.ஆர் நாடக மன்றம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தது. அந்த வேளையில் நமக்குப் போக்குவரத்துச் செலவு மட்டும் கொடுத்தால் போதுமென்று சொல்லியிருக்கிறாரே மக்கள் திலகம். எப்படியோ தேதிகிடைத்துவிட்டதுஸ இதற்கான காரணத்தைக் கண்டுகொள்ளமுயற்சிக்கும் நேரமல்ல இது என்று அவசர அவசரமாக, ஆனந்தத்துடன் ஐநூறு ரூபாயை அட்வான்சாக ஆர்.எம்.வீ அவர்களிடம் கொடுக்கிறார் தில்லையாடி சிவராமன்.
இருந்தும், இந்த இன்பச் சலுகையைத் தனக்கு மட்டும்மக்கள் திலகம் அளித்ததற்கான காரணத்தைத் தேடுகிறார் தில்லையாடி. பிறகுதான் தெரியவருகிறது தில்லையாடி சிவராமனுக்கு.
இசை மணிஎன்றும்இசை ஞானச் செம்மல்என்றும் கர்னாடக இசையுலகில் போற்றுவதற்குரியவராகத் திகழ்ந்தவர் தஞ்சையைச் சேர்ந்த இந்தத் தில்லையாடி சிவராமன். இன்றைய முதல்வர் கலைஞர் அவர்க்கின் அன்பையும், எம்.கே. தியாகராஜ பாகவதரின் நேசத்தையும் நிறைவாகப்பெற்று யிருந்தவர் என்பது ஊரறிந்த உண்மை.
ஒருசமயம் லாயிட்ஸ் ரோடு, முத்து முதலி தெருவில் உள்ள வீட்டில்மக்கள் திலகம் தங்கியிருந்த போது, அவரது நாடக் குழுவில் பாடுவதற்காக, டி.எஸ். துரைராஜ் மூலம் தில்லையாடி சிவராமன் வரவழைக்கப்பட்டார்.
தனது கம்பீரமான குரலில் பாடி மக்கள் திலகத்தைப் பரவசப்படுத்துகிறார் சிவராமன். அவரை ஒருநிமிடம் இருக்கச்சொல்லிவிட்டு உள் அறைக்ககுச் செல்கிறார் மக்கள் திலகம். அந்த நேரம்பார்த்து, அங்கு வேலை செய்யும் பசுபதி, தில்லையாடி சிவராமனை டீ சாப்பிட வெளியே அழைத்துச் சென்று, “இப்பொழுது எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாடிக்கொண்டிருக்கிறார். இந்த வருமானத்தை வைத்துத்தான் அவர் தன்னுடைய ஐந்து குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார். அவர் பிழைப்பில் நீங்கள் ஏன் மண் அள்ளிப்போடுகிறார்கள்?” என்று தில்லையாடி சிவராமனிடம் கேட்கிறார். அவ்வளவுதான்! தில்லையாடி அவர்கள் டீ சாப்பிட்ட கையோடு திரும்பிக் கூடப்பார்க்காமல் அப்படியேதன் வீடு வந்து சேர்ந்துவிட்டார்.
உள்ளே சென்ற வள்ளல்திரும்பி வந்தபோது தில்லையாடி சிவராமன் அங்கு இல்லை. பிறகுதான் தெரிய வருகிறது. தில்லையாடி சிவராமனின் இந்த மனித நேயம். மக்கள் திலகத்தின் மனதில் அப்படியே கல்வெட்டாய்ப் பதிவாகிப் போகிறார் தில்லையாடி சிவராமன்.
தில்லையாடி சிவராமனின் இந்த மனிதநேயத்தை மறக்காமல்நினைவல் வைத்துத்தான் இந்தச் சலுகை அளித்து கௌரவிக்க நினைத்திருக்கிறார் மக்கள் திலகம்.
திருவாரூர் முழுவதும் தெருத்தெருவாக, ‘தங்கவாள் பரிசு பெற்ற நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர் நடிக்கும் இன்பக்கனவுநாடகம் என்று பெரிய அளவில் விளம்பரம் செய்கிறார் தில்லையாடி சிவராமன். அன்று, திருவாரூர் முழுவதும் மற்றும் திருவாரூரிலிருந்து வெளியூருக்குச் செல்லும், சக்தி விலாஸ் பஸ் கம்பெனியின் 150 பேருந்துகளிலும், இன்பக் கனவு நாடக விளம்பரம் காணப்படுகிறது.நாடகம் நடப்பதற்குச் சில தினங்களுக்கு முன், திருவாரூர் ஜமானுதீன் அச்சகத்தில் தன் நேசத்துக்குரிய கலைஞர் அவர்களைச் சந்திக்கிறார் தில்லையாடி சிவராமன். அப்பொழுது தில்லையாடி மீதுகலைஞர் வைத்திருக்கும் அன்பின் மிகுதியால், “இந்த ஊர்ல நாடகம் போட்டு உன்னை லாபத்தோடு அனுப்ப மாட்டாங்க…” என்று அந்த ஊரில் நிலவரம் குறித்து, தில்லையாடி சிவராமனிடம் சொல்லியிருக்கிறார் கலைஞர். ஆனாலும் நம்பிக்கையுடன் செயல்படுகிறார் தில்லையாடி.
அதிகாலையில் ப்ளைமவுத் காரில், திருவாரூர் வந்து சேர்கிறார் மக்கள் திலகம். கலைஞர் எச்சரித்துச் சொன்னது போலவேபுளிச்சகுடி கருணாநிதிஎன்பவரின் மிரட்டலால், சர்மா பங்களாவில் தங்கவேண்டிய மக்கள் திலகத்தை, பழக்கடை ராஜன் வீட்டில்தங்க வைக்கிறார் தில்லையாடி.
அது மட்டுமல்லாமல், நாடகம் துவங்குவதற்கு முன் புளிச்சக்குடி கருணாநிதி கலாட்டா செய்கிறார். தஞ்சை டி.எஸ்.பி. குழந்தைவேலு நிலைமையைக் கட்டுப்படுத்திகிறார்.
நடந்தது எதுவுமே மக்கள் திலகத்துக்குத் தெரியாமலேயேஇன்பக்கனவுநாடகம் முடிகிறது.
திருவாரூரில் நாடகம் முடிந்து ஒரு வாரம் கழித்து, சீர்காழியில்மக்கள் திலகத்தின்அட்வகேட் அமரன்ய நாடகம் நடக்கிறது. அந்த நாடகத்தைப்பார்க்கத் தில்லையாடி சிவராமனும் செல்கிறார். தான் அமர்ந்திருந்த சேரில் சீர்காழி எம்.எல். முத்தையாவை உட்கார வைத்துவிட்டு, தில்லையாடி சிவராமன் மேடைக்கே சென்று விடுகிறார்.
ஒரு காட்சியில் 250 பவுண்டு எடையுள்ள குண்டுமணியை அலேக்காகத் தூக்கிக் கீழே போடும் பொழுது, தவறித் தன் காலிலேயே அவரைப் போட்டுக்கொண்டு விடுகிறார். எழுந்து நிற்க முடியாத அளவுக்கு வள்ளலின் கால் எலும்பு முறிந்து விடுகிறது. உடனே தில்லையாடி சிவராமன், டாக்டர் சம்பத்திடம் அழைத்துச் சென்று முதலுதவி அளித்து, மக்கள் திலகத்தை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.
சென்னையிலும் சில மாதங்களாக சிகிச்சை தொடர்கிறது. செய்தி அறிந்த தில்லையாடி சிவராமன், ‘சிங்கப்பூர் ஷா பிரதர்ஸ்மூலம்அட்ஜஸ்பல் க்ரட்சர்ஒன்றை ஆர்டர் செய்து, அதை குமாரசாமி மூலம் மக்கள் திலகத்திற்குக்கொடுத்தனுப்பி இருக்கிறார். தில்லையாடி அவர்கள்தான் இதை வாங்கி அனுப்பினார். என்று விவரம் தெரியாத மக்கள் திலகம், ஷா பிரதர்ஸிக்கு நன்றிக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
சில நாட்களுக்குப்பிறகுதான் இதை வாங்கிக்கொடுத்தவர் தில்லையாடி என்றும், அதற்கு விலையாக ஷா பிரதர்ஸிடம் வாங்கிக் கொடுத்த நண்பருக்குப் பத்து மூட்டை நெல் கொடுத்ததாகவும் தெரிய வருகிறது மக்கள் திலகத்துக்கு!
இந்த உண்மை தெரிந்த அடுத்த நிமிடமே தில்லையாடி சிவராமனை கௌரவப்படுத்தி நன்றி தெரிவிக்கு, தன் லாயிட்ஸ் ரோடு இல்லத்திற்கு அழைத்து வரக்கார் அனுப்புகிறார் எம்.ஜி.ஆர் வரும் வழியில்தான் மக்கள் திலகம் அழைத்த காரணம் தில்லையாடி சிவராமனுக்குப் புரிகிறது.
மக்கள்திலகம் வாசலில் கார் நின்றது. காரில் இருந்தவாறே வெளியில் எட்டிப்பார்க்கிறார் தில்லையாடி. அங்கே ஹாலில் அண்ணா, சி.பி. சிற்றரசு, நடிகை சரோஜாதேவி ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள் அவர்களைப் பார்த்தவுடன் தில்லையாடிக்குக் கூச்சம்…. மக்கள் திலகத்தின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக ’150 ரூபாய் விலை மதிப்புள்ள பொருள் வாங்கிக் கொடுத்ததற்காக அதற்கு விலையாக வெகுமதி பெறுவதா?’ என்று நினைத்த தில்லையாடி, காரைவிட்டு இறங்கியவுடன், மக்கள் திலகத்தின் வீட்டிற்குள் செல்லாமல், இரண்டாவது முறையும் தன் வீடு வந்து சேர்ந்துவிடுகிறார்
இப்படிப் பலமுறை தில்லையாடி சிவராமனின் உயர்ந்த பண்பைப்பாராட்டி, வாரிக் கொடுத்து மகிழ, தில்லையாடியைத் துரத்தி துரத்திப் பின் தொடர்கிறார் மக்கள் திலகம்.
ஆனால் மக்கள்திலகம் நிறைந்திருப்பதே போதும் என்று விலகி விலகிச்செல்கிறார் சிவராமன்.
சில ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ர் தமிழக முதல்வரான பிறகு, ஒருமுறை பூம்புகார் விருந்தினர் மாளிகையில் தங்கி இருக்கிறார். அப்பொழுது தில்லையாடியிலிருந்து பொறையார் வழியாகத் திருவாரூர் செல்ல பஸ் ரூட் வேண்டி- மனு ஒன்றை மக்கள் திலகத்திடம் சேர்க்கச் சொல்லி, அன்றைய எம்.எல். வான விஜயராகவன்மூலம் கொடுத்தனுப்புகிறார் தில்லையாடி சிவராமன்.
மனுவைப்பார்த்த மக்கள் திலகம், அந்த நிமிடமே மாலைக்குள் பஸ்ரூட் விட உத்தரவு பிறப்பிக்கிறார். காலையில்மனுக்கொடுத்துவிட்டு, அதைப் பற்றிய நினைவே இல்லாமல் டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கிறார் தில்லையாடி சிவராமன். மாட்டு வண்டிகளும், சைக்கிள்களும் மட்டுமே சென்று கொண்டிருந்த அந்த ரோட்டில், பஸ் வந்து கொண்டிருந்ததை பார்த்து, சந்தோஷத்தல் திக்குமுக்காடிப் போகிறார் தில்லையாடி. அது மட்டுமில்லாமல் மறுநாள் வந்த தபாலில் உத்தரவு பிறப்பித்த நகலில்காப்பி டூ சீப் என்ஜினியர், காப்பி டூ ஆர்.டி.. ‘காப்பி டூ தில்லையாடி சிவராமன்என்று வேறு குறிப்பிட்டுக் கௌரவித்து இருந்தது வேறு அவரை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றது.
அன்று மக்கள் திலகத்திடம் பொன்னோ, பொருளோ பெற்றிருந்தால், ஒருமந்திரியின் மனுவுக்குக்கிடைத்திருக்கும் மரியாதை தனக்குக் கிடைத்திருக்குமா என்று இன்னமும், மறைந்தும் மறையாமல் மக்கள் மனங்களில் குடியிருக்கும் மக்கள் திலகத்தை எண்ணி எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறார் தில்லையாடி சிவராமன்.
http://www.puratchithalaivar.org/tamil/special-pages/mgr-thegreat/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக