பொறையாறு - சீர்காழி வழித்தடத்தில் தில்லையாடி வழியாக புதிய பேருந்து
First Published : 09 Jul 2012 01:22:07 PM IST
பொறையாறு, ஜூலை 8: நாகை மாவட்டம், தில்லையாடி வழியாக பொறையாறு - சீர்காழி வழித்தடத்தில் புதிய நகரப் பேருந்து போக்குவரத்து சேவை தொடக்க நிகழ்ச்சி பொறையாறு புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொறையாறு, நாகையிலிருந்து தில்லையாடி வழியாக சீர்காழி, சிதம்பரத்துக்கு அரசுப் பேருந்து போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்பது தில்லையாடி மற்றும் சுற்று வட்டார கிராம மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வந்தது. அதனடிப்படையில், சீர்காழி - பொறையாறு இடையே நகரப் பேருந்து போக்குவரத்து சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.புதிய பேருந்து சேவையை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் கொடியசைத்து தொடக்கிவைத்தார். இந்த நகரப் பேருந்து (தடம் எண். A 21) பொறையாறிலிருந்து தினமும் ஆறு முறை காலை மணி 7.30, 10.25, பிற்பகல் 1.15, மாலை 4.15, இரவு 7.10, 10.30 ஆகிய நேரங்களில் புறப்படும். இந்நிகழ்ச்சியில், பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் ரெத்தினசாமி, தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவர் கோ. கிருஷ்ணசாமி, தில்லையாடி ஊராட்சித் தலைவர் நடராஜன், ஒன்றிய குழுத் தலைவர்கள் கே.வி.ஜனார்த்தனம், தமிழரசன், நாகை மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சந்திரசேகரன், அரசுப் போக்குவரத்துக்கழக கும்பகோணம் மண்டல மேலாளர் சந்திரசேகரன், நாகை கோட்ட மேலாளர் தமிழரசன், பொறையாறு கிளை மேலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
பொறையாறு, நாகையிலிருந்து தில்லையாடி வழியாக சீர்காழி, சிதம்பரத்துக்கு அரசுப் பேருந்து போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்பது தில்லையாடி மற்றும் சுற்று வட்டார கிராம மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வந்தது. அதனடிப்படையில், சீர்காழி - பொறையாறு இடையே நகரப் பேருந்து போக்குவரத்து சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.புதிய பேருந்து சேவையை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் கொடியசைத்து தொடக்கிவைத்தார். இந்த நகரப் பேருந்து (தடம் எண். A 21) பொறையாறிலிருந்து தினமும் ஆறு முறை காலை மணி 7.30, 10.25, பிற்பகல் 1.15, மாலை 4.15, இரவு 7.10, 10.30 ஆகிய நேரங்களில் புறப்படும். இந்நிகழ்ச்சியில், பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் ரெத்தினசாமி, தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவர் கோ. கிருஷ்ணசாமி, தில்லையாடி ஊராட்சித் தலைவர் நடராஜன், ஒன்றிய குழுத் தலைவர்கள் கே.வி.ஜனார்த்தனம், தமிழரசன், நாகை மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சந்திரசேகரன், அரசுப் போக்குவரத்துக்கழக கும்பகோணம் மண்டல மேலாளர் சந்திரசேகரன், நாகை கோட்ட மேலாளர் தமிழரசன், பொறையாறு கிளை மேலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்