திங்கள், 9 ஜூலை, 2012

தில்லையாடி வழியாக புதிய பேருந்து

பொறையாறு - சீர்காழி வழித்தடத்தில் தில்லையாடி வழியாக  புதிய பேருந்து

First Published : 09 Jul 2012 01:22:07 PM IST


பொறையாறு, ஜூலை 8: நாகை மாவட்டம், தில்லையாடி வழியாக பொறையாறு - சீர்காழி வழித்தடத்தில் புதிய நகரப் பேருந்து போக்குவரத்து சேவை தொடக்க நிகழ்ச்சி பொறையாறு புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொறையாறு, நாகையிலிருந்து தில்லையாடி வழியாக சீர்காழி, சிதம்பரத்துக்கு அரசுப் பேருந்து போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்பது தில்லையாடி மற்றும் சுற்று வட்டார கிராம மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வந்தது. அதனடிப்படையில், சீர்காழி - பொறையாறு இடையே நகரப் பேருந்து போக்குவரத்து சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.புதிய பேருந்து சேவையை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் கொடியசைத்து தொடக்கிவைத்தார். இந்த நகரப் பேருந்து (தடம் எண். A 21) பொறையாறிலிருந்து தினமும் ஆறு முறை காலை மணி 7.30, 10.25, பிற்பகல் 1.15, மாலை 4.15, இரவு 7.10, 10.30 ஆகிய நேரங்களில் புறப்படும். இந்நிகழ்ச்சியில், பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் ரெத்தினசாமி, தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவர் கோ. கிருஷ்ணசாமி, தில்லையாடி ஊராட்சித் தலைவர் நடராஜன், ஒன்றிய குழுத் தலைவர்கள் கே.வி.ஜனார்த்தனம், தமிழரசன், நாகை மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சந்திரசேகரன், அரசுப் போக்குவரத்துக்கழக கும்பகோணம் மண்டல மேலாளர் சந்திரசேகரன், நாகை கோட்ட மேலாளர் தமிழரசன், பொறையாறு கிளை மேலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

ஞாயிறு, 4 மார்ச், 2012

மயிலாடுதுறை- தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் சேவை

மயிலாடுதுறை- தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்கக் கோரிக்கை

First Published : 04 Mar 2012 01:52:31 PM IST


 

பொறையாறு, மார்ச் 3: மயிலாடுதுறை -தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், பொறையாறு மற்றும் சுற்றுவட்டாரப் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு மத்திய அரசு, நாடாளுமன்ற ரயில்வே நிலைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ஓ.எஸ். மணியன் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது:
தரங்கம்பாடி -மயிலாடுதுறை வழித்தடத்தில் பொறையார், தில்லையாடி, திருக்கடையூர், ஆக்கூர், செம்பனார்கோவில், மன்னம்பந்தல், மயிலாடுதுறை நகரம் வழியாக மயிலாடுதுறை சந்திப்பு வரை பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து இருந்து வந்தது.
1926 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தினமும் நான்கு முதல் ஆறு முறை ரயில் போக்குவரத்து இருந்து வந்தது. இதனால் சென்னை செல்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. இந்தச் சேவை 1986 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
இதனால் இப்பகுதியினர் சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள மயிலாடுதுறைக்கு சென்று ரயில் சேவையை பயன்படுத்த வேண்டியுள்ளது.
இந்தத் தடத்தில் தரங்கம்பாடி, திருக்கடையூர், தில்லையாடி ஆகியவை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களாக உள்ளதால், இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். மன்னம்பந்தல் பொறியியல், தொழில் நுட்ப கல்லூரிகள் உள்ள இடமாகவும், தரங்கம்பாடி வட்டத்தின் தலைமையிடமாக பொறையாறு விளங்குவதாலும் இங்கு ரயில் சேவை அவசியமாகிறது. தற்போது காரைக்காலிலிருந்து சென்னை செல்லும் ரயில் நாகை,திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக சுமார் 100 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்கிறது. இதனால் பயண நேரமும், செலவும் விரயமாகிறது.
மயிலாடுதுறை -தரங்கம்பாடி ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டால், காரைக்கால் -தரங்கம்பாடி இடையே 15 கி.மீ தொலைவில் புதிய ரயில் பாதை அமைத்தால் சென்னை செல்வதற்கான நேரமும், செலவும் குறையும். ஆகையால், வரும் பட்ஜெட்டில் இந்த ரயில் சேவை தொடங்கப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வியாழன், 23 பிப்ரவரி, 2012

தில்லையாடி வள்ளியம்மை சிலைக்கு மாலை அணிவிப்பு

 தில்லை யாடி வள்ளியம்மையின் நினைவு நாளையொட்டி, அரசு சார்பில், தில்லையாடி மெயின்ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு மயிலாடுதுறை ஆர்டிஓ ரத்தின சாமி, தரங்கம்பாடி தாசில் தார் நேற்று மாலை அணிவி த்து மரியாதை செலுத்தினர்.
இதில், ஊராட்சி தலை வர் நடராஜன், துணைதலைவர் அருள்மொழி, நாகை மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்க தலைவர் சச்சிதானந்தம், பொதுச்செயலாளர் ஆறுமுகம் பொரு ளாளர் பாலசுந்தரம் செய லாளர் ராமு, துணைத்தலை வர் கணேசன், தில்லை யாடி அருணாசல கவிராயர் இல க்கிய பேரவை அமைப்பா ளர் வீராச்சாமி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

THILLAIYADI: இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்

THILLAIYADI: இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

150th anniversary of arrival

Nagapattinam: The 150th anniversary of arrival of the first batch of Indians in South Africa was celebrated at Thillaiyadi village in the district, from where a large number of persons migrated.

The first batch of indentured labourers landed in South Africa on Nov 16, 1860.

Valliamma, daughter of an immigrant labourer from the village, had taken part in an agitation organised by Mahatma Gandhi against discriminatory legislations and apartheid. She was imprisoned and died in jail on her 16th birthday on February 22, 1914.

Gandhi had visited Porayar and Thillaiyadi soon after his return from South Africa in 1915. So, Thillaiyadi became the natural choice for holding the celebrations, organisers said.

The celebrations were organised jointly by the Indo-South African Friendly Relationship Association, wards of freedom fighters, village panchayat and village welfare association

வியாழன், 26 ஜனவரி, 2012

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்

உனது இதயத்தில் நேர்மை இருந்தால் உனது செயலில் அழகு இருக்கும். செயலில் அழகு இருந்தால் வீட்டில் அமைதி இருக்கும். வீட்டில் அமைதி இருந்தால் நாட்டில் அமைதி இருக்கும். நாட்டில் அமைதியிருந்தால் உலகில் சமாதானம் இருக்கும் .

Where there is righteousness in the heart there is beauty in the character

When there is beauty in the character there is harmony in the home

When there is harmony in the home there is an order in the nation

When there is an order in the nation there is peace in the world

மயிலாடுதுறை - தரங்கம்பாடி

தரங்கம்பாடி அகல ரயில் பாதைப் பணிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு: பாஜக கோரிக்கை

First Published : 23 Jan 2012 12:38:17 PM IST



மயிலாடுதுறை, ஜன. 22: மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே அகல ரயில் பாதை அமைக்க
ரூ. 100 கோடி  ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், வழக்குரைஞருமான கே. ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை - தரங்கம்பாடி வழித்தடம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது. இந்த மார்க்கத்தில் ரயில் சேவை, பல நிபந்தனைகளுக்கு உள்படுத்தப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளம் சென்ற கீழ் நிலத்தையும் விற்பனை செய்ய முயற்சிகள் நடைபெறுகின்றன. புதிய பாதையில் ரயில்வே பாதை அமைக்க மாநில அரசு ரயில்வே துறைக்கு 50 சத தொகையை அளிக்க வேண்டும். இதனால்,   தமிழகத்தில் பல்வேறு ரயில் பாதை ஆய்வு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை - தரங்கம்பாடி மார்க்கம் தரங்கம்பாடி டேனிஸ் கோட்டை, தில்லையாடி,திருக்கடையூர் போன்ற சுற்றுலா தலங்களும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு  செல்லும் முக்கிய பாதையாகவும் உள்ளது. எனவே, இந்த மார்க்கத்தில் ரயில் சேவையைத் தொடங்க மத்திய ரயில்வே அமைச்சகம் முன்வர வேண்டும். எதிர்வரும் ரயில்வே பட்ஜெட்டில், ரயில்வே அமைச்சகம்  இந்த பாதையை சீரமைக்க ரூ. 100 கோடியை ஓதுக்கீடு செய்து,  ஓராண்டுக்குள்  ரயில் பாதை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இளங்கோவன் மாலை அணிவிப்பு

தில்லையாடி வள்ளியம்மை சிலைக்கு இளங்கோவன் மாலை அணிவிப்பு
First Published : 25 Jan 2012 02:36:47 PM IST



பொறையாறு, ஜன. 24: நாகை மாவட்டம், தில்லையாடியில் உள்ள தியாகி வள்ளியம்மை சிலைக்கு மத்திய முன்னாள் இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திங்கள்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மயிலாடுதுறைக்கு அவர் திங்கள்கிழமை வந்தார். தொடர்ந்து, திருக்களாச்சேரிக்கு சென்று அண்மையில் மறைந்த காங்கிரஸ் கட்சியின் தொழில்சங்க மாநில தலைவராக இருந்த ஜம்புவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், தில்லையாடிக்கு வந்த இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் பேச்சாளராக இருந்து சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த அன்பழகன் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தார்.
தொடர்ந்து, தில்லையாடியில் உள்ள வள்ளியம்மை நினைவு மண்டபத்தை இளங்கோவன் பார்வையிட்டார். அங்கிருந்த மகாத்மா காந்தி எழுதிய கடிதங்கள், அரிய புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.
அங்குள்ள தியாகி வள்ளியம்மை சிலைக்கும், பொறையாறு அருகே ராஜீவ்புரத்தில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கும் இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்ட பொறுப்பாளர் பூம்புகார் எம். சங்கர்,ஜம்பு. கென்னடி, பூம்புகார் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.எஸ். கார்த்தி, வட்டார பொதுச் செயலர் ஜி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

வீரப் பெண்மணி வள்ளியம்மை!

விகடன் பொக்கிஷத்திலிருந்து. நன்றி, விகடன்!
வீரப் பெண்மணி வள்ளியம்மை!

1915-ம் வருடம், ஏப்ரல் மாதம், 30-ம் தேதி. தரங்கம்பாடியிலிருந்து புறப்பட்ட இரண்டு மாட்டு வண்டிகள், தஞ்சை மாவட்டத்தில் உள்ள தில்லையாடியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. முதல் வண்டியில் மகாத்மா காந்தியும், அன்னை கஸ்தூரிபாயும் அமர்ந்திருக்கிறார்கள்.
வண்டிகள் தில்லையாடி எல்லையை மிதிக்கின்றன. உணர்ச்சியை வென்ற மகாத்மாவின் மனம் அப்பொழுது உணர்ச்சி வசப்படுகிறது. கண் கலங்குகிறார். வண்டியை விட்டு இறங்குகிறார். கீழே குனிகிறார். இரு கரங்களையும் குவித்து மண்ணை அள்ளி எடுக்கிறார். கண்களில் ஒற்றிக் கொள்கிறார்.
என்ன புண்ணியம் செய்து விட்டது அந்த மண்? அது சாதாரண மண் அல்ல; காந்திஜி தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் உயிர் நீத்த வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகிய தியாகச் செம்மல்களைத் தந்த வீர மண் அது. தென்னாப்பிரிக்க அரசாங்கம் சத்தியாக்கிரகிகளுக்குக் கொடுத்த தொல்லைகள் பயங்கரமானவை. அந்தத் தொல்லைகளைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாமல் லட்சியம் ஒன்றையே உயிராகக் கொண்டு சிறை சென்ற வீரப் பெண்மணி, தில்லையாடி வள்ளியம்மை.
போராட்டத்தில் ஈடுபட்டு, உடல் நலிவுற்று படுக்கையில் இருந்தார் அந்த வீரப் பெண்மணி. அப்பொழுது காந்திஜி கேட்டார்: ”வள்ளியம்மை! நீ சிறை சென்றதற்காக வருந்துகிறாயா?”
”வருத்தமா? இப்போது கூட இன்னொரு தடவை கைது செய்யப்பட்டால், நான் சிறைக்குச் செல்லத் தயார்” என்று வள்ளியம்மை பதில் அளித்தாள்.
”அதனால் நீ இறந்து போக நேர்ந்தால்?” என்று புன்முறுவலுடன் தொடர்ந்து கேட்டார் காந்திஜி.
”அதை நான் பொருட்படுத்த மாட்டேன். தாய்நாட்டிற்காக உயிரைக் கொடுக்க யார்தான் விரும்ப மாட்டார்கள்?” என்று கேட்டு காந்தியையே நெஞ்சுருக வைத்தாள் வள்ளியம்மை.
அதற்குப் பிறகு, வள்ளியம்மை சில நாட்கள் கூட உயிருடன் இருக்கவில்லை.
அவள் மரணத்தைப் பற்றி மகாத்மா கூறினார்: ”வள்ளியம்மையின் தொண்டு அழியாதது. தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரக சரித்திரத்தில் வள்ளியம்மையின் பெயர் நீங்காத இடம் பெற்றிருக்கும்.”